2024 ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் நிலையில் அணியின் நட்சத்திர வீரர் தோனி இந்த வருடம் ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவாரா அல்லது அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனில் தோனி நிச்சயம் விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் எப்போதும் சரியான முடிவுகளை எடுத்துள்ளார், அணியின் நிர்வாகம் அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.