3ஆவது முறையாக ஆட்சியமைத்ததும், ஊழலுக்கு எதிராக தற்போது எடுத்துள்ளதை விட, மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் 3வது முறையாக தனது அரசு ஆட்சியமைக்க இன்னும் சில நாள்களே இருப்பதாகவும், அதுபோல் மீண்டும் ஆட்சியமைத்ததும், ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.