கள்ளக்குறிச்சிக்கு உட்பட்ட ரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வேட்பாளர் குமரகுரு, கேப்டன் இல்லை என்றாலும் உங்களைப் பார்த்துக் கொள்ள நாங்கள் இருக்கின்றோம் என்று கூறினார். அப்போது பிரேமலதா உணர்ச்சி பெருக்கியில் கண்ணீர் விட்டு அழுதார். ரிஷிவந்தியம் தொகுதியில் தான் கேப்டன் ஆன்மா உள்ளதால் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று பிரேமலதா கூறினார்