
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 4-ம்வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பள்ளி தாளாளரின் கணவர் வகுப்பறையில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தாங்க முடியாத சிறுமி தன் பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி அழுதுள்ளார். இதனால் கோபம் அடைந்த உறவினர்கள் பள்ளியை அடித்து நொறுக்கினர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அந்த பள்ளி தாளாளர் சுதா, அவருடைய கணவர் வசந்தகுமார் (54) உட்பட 4 பேரை கைது செய்தனர். ஏற்கனவே கிருஷ்ணகிரியில் ஆசிரியர்கள் 8-ம்வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதைத் தொடர்ந்து தற்போது பள்ளியில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.