பிரபல நடிகர் கோட்டா சீனிவாசராவ் கடந்த மாதம் உயிரிழந்தார். அந்த சோகத்தை மறைவதற்குள் இன்று (ஆகஸ்ட் 18) அவரது மனைவி ருக்மிணியும் ஹைதராபாத் நகரில் காலமானார். கணவரின் மறைவால் மன அழுத்தத்தில் இருந்த ருக்மிணி, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துயர செய்தி திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, 2010ஆம் ஆண்டு இவர்களின் மகன் கோட்டா வெங்கட ஆஞ்சநேய பிரசாத் சாலை விபத்தில் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, கோட்டா குடும்பம் மூன்றாவது பேரிழப்பால் பெரும் மனவலியில் மூழ்கியுள்ளது.
