மத்திய அரசானது ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மத்திய அரசு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் குறித்து சமீபத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இதற்கான வீட்டுக்கடன் பெறுவதற்கு, வாடகை மற்றும் குடிசை வீட்டில் வசிக்கும் ஏழை, நடுத்தர மக்கள் தகுதியானவர்கள். இந்த திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கு வட்டி விகித சலுகையிலும் பலன் கிடைக்கும்