சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் எஸ்.எம் நகர் போலீஸ் குடியிருப்பில் ஜார்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் ஆவடியில் இருக்கும் ஐந்தாவது பாட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிராணா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தன்வி என்ற நான்கு வயது பெண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஜார்ஜுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஜார்ஜை அவரது மனைவி கண்டித்தார். மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் போதெல்லாம் ஜார்ஜ் நான் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்வேன் என அடிக்கடி கூறியுள்ளார்.

இதனால் வழக்கம் போல தான் அப்படி சொல்கிறார் என நினைத்து பிரானா தனது குழந்தையுடன் படுத்து தூங்கினார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது தனது கணவர் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜார்ஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.