வடக்கு டெல்லி, ஜஹாங்கிர்பூர் பகுதியில் வசித்து வரும் சேத்ராமுக்கு, மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின் திருப்புளியால் மனைவியின் உடலில் பல இடங்களில் குத்தி கொடுமைப்படுத்திய சேத்ராம், அந்தரங்க இடங்களில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

எனினும் ஆத்திரம் அடங்காமல் மனைவியின் மூக்கை கடித்து துப்பி உள்ளார் சேத்ராம். அதனை தொடர்ந்து படுகாயங்களுடன் பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கு முன்னதாகவே மனைவி உடன் ஏற்பட்ட தகராறில் அவரை தாக்கியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சேத்ராம், கடந்த வாரம் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் மீண்டுமாக மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு சண்டையிட்டுள்ளார் சேத்ராம். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..