கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சன்னப்பட்டினத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்குள்ள  கனரா வங்கி அருகே உள்ள ஏடிஎம்மில் ராகவேந்திரா என்ற முதியவர் ஒருவர் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் டுத்த பணத்தோடு  அவர் நிறுத்தியிருந்த அவருடைய பைக்கிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த திருடன் ஒருவன் ரூ.10 நோட்டுகளை வீசி, பணம் கீழே விழுந்ததாக ராகவேந்திராவை திசை திருப்பியுள்ளான். தரையில் கிடந்த ரூ.10 நோட்டுகளை ராகவேந்திரா எடுத்துக்கொண்டிருந்தபோது, ​​திருடன் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தான். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.