ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி கூட்டணி நிறுவனமான Pegatron என்ற நிறுவனம் இந்தியாவில் ஏற்கெனவே தொழிற்சாலையை அமைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மேலும் ஒரு ஐபோன் தொழிற்சாலையை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவின் இரண்டாவது ஐபோன் தொழிற்சாலையை சென்னை அருகே உள்ள மஹிந்திரா சிட்டியில் அமைக்க பெகட்ரான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 6 மாதத்திற்கு முன் Pegatron இந்தியாவில் 150 மில்லியன் டாலர் முதலீட்டில் தனது முதல் தொழிற்சாலையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.