அக்ஷன் மாராத்தே என்பவர் twitter பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, புனேவில் நடைபெற்ற கேரம் போர்டு போட்டியில் 83 வயதான என்னுடைய பாட்டி கலந்து கொண்டார். அந்த போட்டியில் என் பாட்டியை விட இளையவர்கள் மற்றும் உறுதியாக, நடுக்கம் இல்லாத கைகளை கொண்டவர்களோடு போட்டியிட்டு இரட்டையர் பிரிவில் தங்கமும், தனிநபர் போட்டியில் வெண்கலமும் வென்று பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார் என குறிப்பிட்டுள்ளார். அவருடன் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டதற்காக நாங்களும் பெருமை கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார். இதுவரை இந்த பதிவினை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பலரும் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் தன்னுடைய பேரன்களுடன் சேர்ந்து 83 வயதான பாட்டி கேரம்போர்டு விளையாடும் வீடியோவுடன் அந்த பதிவு வெளியாகி உள்ளது.
அடடே சூப்பர்.. கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற 83 வயதான பாட்டி… பேரன் வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!
Related Posts
இது கூடவா தெரியல… மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்….!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண்ணுக்கும் குடும்பத்தார் சம்பந்தத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. மணமகன் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத நிலையில் மணமகள் வீட்டாரிடம் நன்றாக படித்தவர் என்று பொய் கூறியுள்ளனர் திருமண நாளில் மாலை மாற்றும் நிகழ்வுக்கு…
Read moreடெல்லி காங். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகினார்…. திடீர் அறிவிப்பு..!!
டெல்லி காங்கிரஸ் மாநிலத் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், மக்களவைத் தேர்தலில் அறிமுகம்…
Read more