அக்ஷன் மாராத்தே என்பவர் twitter பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, புனேவில் நடைபெற்ற கேரம் போர்டு போட்டியில் 83 வயதான என்னுடைய பாட்டி கலந்து கொண்டார். அந்த போட்டியில் என் பாட்டியை விட இளையவர்கள் மற்றும் உறுதியாக, நடுக்கம் இல்லாத கைகளை கொண்டவர்களோடு போட்டியிட்டு இரட்டையர் பிரிவில் தங்கமும், தனிநபர் போட்டியில் வெண்கலமும் வென்று பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார் என குறிப்பிட்டுள்ளார். அவருடன் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டதற்காக நாங்களும் பெருமை கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார். இதுவரை இந்த பதிவினை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பலரும் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் தன்னுடைய பேரன்களுடன் சேர்ந்து 83 வயதான பாட்டி கேரம்போர்டு விளையாடும் வீடியோவுடன் அந்த பதிவு வெளியாகி உள்ளது.