சமூக வலைதளங்கள் தற்போதைய நவீன உலகில் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. பல்வேறு வேடிக்கையான காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெடிசன் மத்தியில் வைரல் ஆவது உண்டு. அதாவது பூனை, யானை போன்ற விலங்குகளின் வீடியோக்கள் மற்றும் குழந்தைகளின் குறும்புத்தனம் போன்ற வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகும்.

அதிலும் விலங்குகள் குறித்த வீடியோகள் அதிக அளவில் வைரல் ஆகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் விலங்குகளை கண்காணிப்பதற்காக வைக்கப்பட்ட கேமராவில் கரடி ஒன்று 400 செல்பிகளை வித்யாச வித்தியாசமாக எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது மிகவும் ஆச்சரியமுடன் பார்க்கப்படுகிறது.