பிரசித்தி பெற்ற பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமிய இளைஞர்கள் மஞ்சப்பையில் வாட்டர் பாட்டில், பிஸ்கட், ஜுஸ் உள்ளிட்டவை வைத்து வழங்கினர்.

அத்துடன் சுட்டெரிக்கும் வெயிலில் காவடி தூக்கி வந்தவர்களுக்கு உதவ குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மத நல்லிணக்கத்துக்கு உஜனி எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு அமைந்தது.