சரவணன்-மீனாட்சி எனும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக மக்களிடம் பிரபலமானவர் தான் ரச்சிதா. பிரிவோம் சந்திப்போம் எனும் தொடர் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு வந்த அவர் சரவணன் மீனாட்சி 2, 3 சீசன்களில் தொடர்ந்து நடித்தார்.

அதன்பின் கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் என நடித்து வந்த ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து அவர் எந்த தொடர் வருவார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்க எந்த ஒரு தகவலும் வரவில்லை. இந்நிலையில் ரச்சிதா இலங்கையில் கடந்த சில தினங்களாக தன் விடுமுறை நாட்களை கொண்டாடுகிறார்.