தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அபிராமி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அபிராமி பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுடன் விருமாண்டி படத்தில் நடித்த பிறகு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட 10 வருடங்கள் விலகி இருந்த நடிகை அபிராமி தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை அபிராமியும், அவருடைய கணவர் ராகுலும் பெற்றோர் ஆனதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ‘கல்கி’ என்ற பெண் குழந்தையை தத்து எடுத்ததாகவும் அதன் பின் வாழ்க்கையே முற்றிலுமாக மாறிவிட்டதாகவும் அபிராமி இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார். இதனை அன்னையர் தினத்தன்று சொல்வதில் பெருமைப் படுகிறேன் என்றும் உங்களது ஆசீர்வாதங்கள் எனக்குத் தேவை என்றும் அபிராமி அவரது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.