சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளி, ஆபத்தான உபகரணங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டாகக் காட்டியுள்ளது. காணொளியில், ஒரு நபர் டைல் கட்டர் போன்ற கூர்மையான இயந்திரத்தைப் பயன்படுத்தி வேலை செய்கிறார். ஆனால், திடீரென அந்த இயந்திரம் அவரது கையில் காயத்தை ஏற்படுத்திவிடுகிறது.
அதுமட்டுமின்றி அவரது காலில் அந்த மிஷின் மாட்டி கொள்கிறது. இதையடுத்து கையில் இருந்து ரத்தம் சொட்ட, அவர் வலியில் அலறுவது காணொளியில் பதிவாகியுள்ளது. இந்தக் காணொளி வைரலாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
