சமீபகாலமாகவே வயது வித்தியாசமின்றி மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை நாம் செய்திகளாக பார்த்து வருகிறோம். அந்தவகையில் தற்போது குஜராத் மாநிலத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த 19 வயது இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஜாம்நகரின் படேல் பார்க் பகுதியைச் சேர்ந்த வினித் மெஹுல்பாய் குன்வாரியா (19)  நவராத்திரி விழா முன்னிட்டு நடனப் பயிற்சி மேற்கொண்டார். நடனமாடிக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். இதனையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலே அவர் உயிரிழந்தார்.