நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமம் ஒன்றில் அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது .இங்கு நேற்று பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு நடைபெற்றது. இதில் ஏழு பழங்குடியின மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்காமல் வனப்பகுதியில் ஒளிந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த, கூடலூர் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் அழகரசி மற்றும் சிறப்பு காவலர் உதவியாளர் உஷா ஆகிய இருவரும் வனப்பகுதிக்கு நடந்தே சென்று அந்த ஏழு மாணவர்களின் கண்டறிந்து மீட்டனர். அவர்களிடம் அன்பாக பேசி பள்ளிக்கு அழைத்து வந்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.