தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மனோபாலா. இவர் 700-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடம் மற்றும் காமெடி ரோல்களில் நடித்துள்ளார். நடிகர் மனோபாலாவுக்கு அண்மையில் லேசான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று அவர் திடீரென அவருடைய இல்லத்தில் மரணம் அடைந்தார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள நடிகர் மனோபாலாவின் உடலுக்கு இயக்குநர் விக்ரம் உள்ளிட்ட திரையுலகினர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் வந்து கொண்டிருப்பதால், அங்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வளசரவாக்கம் மின் மயானத்தில் நாளை காலை 10 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.