சென்னை தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் வீட்டினுள் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை லீலா பாய் (75) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இறந்தது குறித்த காவல்துறையினரின் விசாரணையில், இவர் கொஞ்ச நாட்களாகவே  உடல்நலக் குறைவால் வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தான் சம்பவத்தன்று லீலா பாய் தூங்கும்போது கொசுவர்த்தியை கொளுத்தி வைத்திருந்தபோது அதன் மூலம் அருகில் இருந்த நியூஸ் பேப்பரில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.