சென்னையில் உள்ள பூவிருந்தவல்லி பகுதியை சேர்ந்தவர் பாலகுரு (25). காஞ்சிபுரத்தை சேர்ந்த அஜித் (24). இவர்கள் இருவரும் டேட்டிங் ஆப் மூலமாக பேசி பழகி வந்துள்ளனர். பாலகுரு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜித்தை வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் ஓரினச்சேர்க்கை மேற்கொண்ட நிலையில், பாலகுரு நேற்று சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிய வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அஜித், பாலமுருகன் மீது சுடுதண்ணீரை ஊற்றியுள்ளார். இதில் அவரின் கை, வயிறு, மார்பு, ஆணுறுப்பு உள்பட பல பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அஜித்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.