சென்னையில் லிப்டில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்து வருபவர் அபிஷேக். இந்நிலையில் ஹோட்டல் ஊழியர் அபிஷேக் லிப்ட் கதவு முழுவதும் மூடாமல் கீழே இறங்கியுள்ளார். அப்போது எதிர்ப்பாராத விதமாக லிப்டுக்கும் வெளி கதவுக்கும் இடையே சிக்கியுள்ளார்.

இதில் அவரது உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.