உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு 51 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே திருமணமான ப்ரீத்தி என்பவர் நிதி உதவி பெறுவதற்கு பொய்யாக மீண்டும் தனது கணவர் ரமேஷை திருமணம் செய்ய இருந்தார்.

ஆனால் திருமணத்தின் போது கணவர் வராததால் நிதி உதவியை தவற விடக்கூடாது என்பதற்காக தன்னுடைய அண்ணன் கிருஷ்ணாவை அவர் திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வர ப்ரீத்தி, ரமேஷ் மற்றும் கிருஷ்ணா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.