கேரளா மாநிலத்தில் அரசு அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வை வழங்கி அறிவித்து உள்ளது அம்மாநில அரசு. இதனை மொத்தம் 87,977 அங்கன்வாடி பயனாளர்கள்  பயனடைவார்கள். மேலும் 10 வருடத்திற்கு மேலாக பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல மற்ற ஊழியர்களுக்கு 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பயனடைந்துள்ளனர். இந்த சம்பள உயர்வு டிசம்பர் மாதம் தான் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.