முன்னாள் RBI ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் (92) சென்னையில் இன்று காலமானார். தமிழ்நாட்டின் முதன்மை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதனின் தந்தை இவர். 1990-92ம் ஆண்டுகளில் RBI ஆளுநராக இருந்தபோது, இந்தியா பொருளாதார ரீதியாக பல சவால்களை சந்தித்தது. இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களுக்கான பணத்தை கூட திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்த இந்தியாவின் நிலைமையை சாமர்த்தியமாக சமாளித்தவர்.