நாடு முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி  முதல்  எட்டாம் தேதி வரை வன உயிரின பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அக்டோபர் எட்டாம் தேதி மட்டும் சுற்றுலா தளங்களுக்கான நுழைவு கட்டணத்தை ரத்து செய்து வனத்துறை அறிவித்தது. அதன்படி கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களான மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, தூண் பாறை ,குணா குகை உள்ளிட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு ஒரு நாள் மட்டும் நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலா பயணங்களில் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. இந்த கட்டண ரத்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.