சென்னை மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு ஐ.சி.எப் காலனியில் வசிக்கும் இளம்பெண் அம்பத்தூர் அனைத்து மக்களுக்காக நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் அந்த பெண்ணின் கணவரான கார்த்திக் என்பவரை விசாரிப்பதற்காக போலீசார் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். நேற்று காலை முதல் மதியம் வரை மகளிர் காவல் நிலையத்தில் காத்திருந்த கார்த்திக்கிடம் விசாரிக்காமல் போலீசார் காலம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து கேட்டபோது பெண் போலீஸ் ஒருவர் உன்னை விசாரிக்க நேரம் ஆகும், வெளியே சென்று முட்டி போடு என கூறியுள்ளார்.

இதனால் கோபமும், விரக்தியும் அடைந்த கார்த்திக் காவல் நிலையம் முன்பு நடுரோட்டில் முட்டி போட்டு நின்றுள்ளார். இதனை பார்த்த போலீசார் அவரை எழுந்து வருமாறு கூறியுள்ளனர். அப்போது கார்த்திக் சாலையில் சென்ற பேருந்து சக்கரத்தில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வலுக்கட்டாயமாக போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்தனர். இதனை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.