பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 26 வயதுடைய பட்டதாரி பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கும், சேலத்தைச் சேர்ந்த கிஷோர்(24) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதராக மாறியது. அந்த பெண்ணை விட கிஷோர் 2 வயது குறைந்தவர். ஆனாலும் கடந்த 3 1/2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நெருங்கி பழகியதால் அந்த பெண் கர்ப்பமானார். இதனையடுத்து கிஷோரின் அத்தை உரை உறவினரான சித்ரா என்பவர் அந்த பெண்ணுக்கு கருகலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் கிஷோர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் கிஷோரின் தாய் அமுதா, தம்பி ஹரிசங்கர் ஆகியோர் இளம் பெண்ணை தவறாக பேசி தாக்கியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கிஷோர் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் சித்ராவையும் கைது செய்துள்ளனர்.