கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில் பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சொரியம்பாளையம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வீட்டில் பீகாரை சேர்ந்த பின்டு கேவட் (25) என்பவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது தெரியவந்தது. இதனால் 2 கிலோ எடையுள்ள 4 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பின்டு கேவட்டை கைது செய்தனர்.