அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் கடைவீதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உடையார்பாளையம் தெற்கு பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர் இடையார் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பதும், சட்டவிரோதமாக அவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் ஜெய்சங்கரை கைது செய்ததோடு, அவரிடமிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.