சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனக பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் செங்குன்றத்தில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கனகபிரியாவிற்கும், அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க இருதரப்பு பெற்றோரும் முடிவு செய்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதனையடுத்து திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் கால அவகாசம் கேட்டதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கனகபிரியா தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கனகபிரியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.