தர்மபுரி மாவட்டத்திலுள்ள மன்னன்கொட்டாய் கிராமத்தில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சபீனா என்ற மனைவியும், 11 மாத ஆண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஜீவானந்தத்தின் குடும்பத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜீவானந்தம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவானந்தத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.