கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை குப்பிச்சிபுதூர் பகுதியில் தண்டபாணி- கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சவுத்ரி ராஜ்(30) ரோபோடிக் இன்ஜினியரிங் படித்துள்ளார். கடந்த 2015- ஆம் ஆண்டு மெக்சிகோ நாட்டிற்கு ராஜ் வேலைக்கு சென்றபோது டனியாலா(30) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இரு வீட்டார் முன்னிலையில் குப்பிச்சிபுதூரில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து மணமகன் கூறியதாவது, எங்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். நான் பள்ளியில் படிக்கும் போதே வெளிநாட்டு பெண்ணை தான் திருமணம் செய்வேன் என சபதம் எடுத்தேன். அதன்படி வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார்.