தேனி மாவட்டத்தில் உள்ள வாழையாத்துப்பட்டியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகுமார் தனது இரு சக்கர வாகனத்தில் கந்தசாமிபுரம் எஸ்.வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பள்ளி வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சசிகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.