கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் குளத்துபாதை பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதி வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.