திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பித்தளைப்பட்டி தெற்கு தெருவில் அலெக்ஸ் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று அலெக்ஸ்பாண்டி திண்டுக்கல் தோமையார்புரம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ்குமார் என்பவர் அலெக்ஸ் பாண்டியிடம் பீர் பாட்டிலை உடைத்துக் காட்டி செலவுக்கு பணம் தருமாறு மிரட்டியுள்ளார். இதுகுறித்து அலெக்ஸ் பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.