திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டியில் ஆண்டிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேகர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது உறவினரான ஆண்டி என்பவர் தகராறை விலக்கி விட்டுள்ளார்.

இதில் கோபமடைந்த சேகர் ஆண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த ஆண்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சேகரை கைது செய்தனர்.