கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரத்தில் இருக்கும் பள்ளியில் 9 வயதுடைய சிறுமி நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி பள்ளிக்கு நடந்து சென்றார். அப்போது அதே ஊரில் வசிக்கும் வீரன் என்பவர் பள்ளியில் விடுகிறேன் எனக்கூறி சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் கரும்பு தோட்டத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அலறி சத்தம் போட்டார். அவரது சட்டம் கேட்டு தொழிலாளர்கள் ஓடி வந்து வீரனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் வீரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.