நீலகிரி மாவட்டத்திலுள்ள கெரடா வட்டம் வெற்றி நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியின் பெற்றோரும் ரவிச்சந்திரனும் நட்பாக பழகி வந்தனர். அவ்வபோது ரவிச்சந்திரன் சிறுமிக்கு இனிப்புகளை வாங்கி கொடுத்துள்ளார்.

மேலும் ரவிச்சந்திரன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.