ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை துறையாம்பாளையம் இந்திரா நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் கொண்டயம்பாளையத்தைச் சேர்ந்த தர்மன் என்பதும், மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தர்மனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.