திருச்சி மாவட்டத்தில் உள்ள எட்டரை கிராமத்தில் முகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரிலீஸ் செய்து பதிவிட்டார். மேலும் நேற்று முன்தினம் எட்டரை கிராமத்தில் இருக்கும் கடைவீதியில் கையில் அரிவாளை வைத்துக் கொண்டு பொதுமக்களை முகேஷ் அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முகேஷை கைது செய்தனர்.