ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை ஊராட்சி மக்களை ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நேற்று சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து ஆருத்ர தரிசனம் திருவிழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின் ஆட்சியர் விஷ்ணு, ராமநாதபுரம் புறப்பட்டார். அப்போது திடீரென மழை பெய்ததால் ஆட்சியருக்கு குடை பிடித்து கொண்டு உதவியாளர் நனைந்த படி வந்தார்.

இதனைப் பார்த்த ஆட்சியர் உடனே குடையை வாங்கி, உதவியாளர் தோளில் கை போட்டு ஒரே குடையில் அழைத்து வந்தார். தனது உதவியாளர் மழையில் நனையாமலிருக்க பாதுகாப்புடன் ஆட்சியர் குடை பிடித்து அழைத்து வந்த சம்பவம் பொதுமக்களை நெகிழ்வடையச் செய்தது.