மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து புயல், வெள்ள நிவாரணம் ரூ.6,000 வாங்க ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ரேஷன் கடைகளில் இன்று விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தால் பணம் கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், கூட்டம் காரணமாக விண்ணப்பம் வாங்க சென்ற பலரை மதியத்திற்கு மேல் வர சொல்லி திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. டிசம்பர் 22 வரை அவகாசம் இருப்பதால் நாளை கூட சென்று வாங்கிக்கொள்ளலாம்.