மிக்ஜாம் புயலால் சேதமடைந்த பர்னிச்சர் பொருட்களை குப்பையில் வீச வேண்டாம் என்று கூறி, மாநகராட்சியை தொடர்பு கொள்ள உத்தரவிட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை மூழுவதும் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன. அதில் முக்கியமாக வீடுகளில் பயன்படுத்தப்படும், கட்டில், சேர் போன்ற பொருட்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

இதை மக்கள் குப்பைகளில் வீசி வருகின்றனர். இந்தநிலையில், சென்னையில் உடைந்த பர்னிச்சர் பொருட்களை குப்பை தொட்டிகளில் வீச வேண்டாம். 1800 571 2069 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் மாநகராட்சி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து எடுத்து செல்வார்கள்-சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.