தென்காசி மாவட்டத்தில் உள்ள தேவிபட்டணம் காமராஜர் காலணியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன்(20) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணேசன் சிறுமிகளிடம் பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கணேசன் சிறுமிகளை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இதனால் கணேசனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.