சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியில் சிங்காரவேலு(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 45 நாட்களுக்கு முன்பு சிங்காரவேலுவுக்கு வெள்ளியம்பட்டி பள்ளக்காடு பகுதியில் சேர்ந்த மோனிஷா(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு தாய் வீட்டிற்கு சென்ற மோனிஷா மீண்டும் தனது வீட்டிற்கு வந்தார்.

அதன் பிறகு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று வீட்டுக்கு அருகில் இருக்கும் கிணற்றில் மோனிஷா சடலமாக மிதந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோனிஷாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மோனிஷா எதுக்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.