தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக உள்ள காஜல் அகர்வால், இப்போது கமல்ஹாசனுடன் இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகளிர் தினத்தை முன்னிட்டு காஜல் அகர்வால் கூறியதாவது, “பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள் ஆவர். அவர்கள் தேர்ந்தெடுத்து கொள்ளும் துறையில் முன்னேறி செல்வதற்காக யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

நமக்கு தேவையான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் நமக்கு உள்ளது. யாருக்காகவும் பயந்து நீ உன்னுடைய தன்மானத்தை இழக்கவேண்டாம். பெண்கள் தைரியமாக வாழ்க்கையில் முன்னேறவேண்டும்”என்று கூறினார்.