ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. மகளிர் உலக கோப்பையின் எட்டாவது பதிப்பான இந்த தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது. இங்கிலாந்தில் முதல் தொடர் நடைபெற்ற நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பையை இந்தியா நடத்தியது.

அது மட்டுமல்லாமல் கலந்த 2012 ஆம் ஆண்டு வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்றன. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு 10 அணிகளாக எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. இதுவரை ஏழு முறை மகளிர் டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த தொடர் நடைபெறவில்லை.

இதனைத் தொடர்ந்து எட்டாவது முறையாக மகளிர் டி20 உலக கோப்பை போட்டி பிப்ரவரி 10ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்க உள்ளது. பெண்கள் டி20 அணிகளை பொருத்தவரையில் 299 புள்ளிகள் உடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் அதனை தொடர்ந்து நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்திய அணி 277 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் மீதமுள்ள நாடுகளிடம் பெற்றுள்ளன.

கேப் டவுனில் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் தென்னாப்பிரிக்காவை இலங்கை அணி எதிர்கொள்கின்றது. அதனை தொடர்ந்து முதலாவது அரை இறுதி ஆட்டம் பிப்ரவரி 23ஆம் தேதியும் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் பிப்ரவரி 24ஆம் தேதியும் நடைபெறும் எனவும் இறுதிப்போட்டி பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.