ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. மகளிர் உலக கோப்பையின் எட்டாவது பதிப்பான இந்த தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது. இங்கிலாந்தில் முதல் தொடர் நடைபெற்ற நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பையை இந்தியா நடத்தியது.

அது மட்டுமல்லாமல் கலந்த 2012 ஆம் ஆண்டு வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்றன. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு 10 அணிகளாக எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. இதுவரை ஏழு முறை மகளிர் டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த தொடர் நடைபெறவில்லை.

இதனைத் தொடர்ந்து எட்டாவது முறையாக மகளிர் டி20 உலக கோப்பை போட்டி பிப்ரவரி 10ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்க உள்ளது. இதில் பத்து அணிகளும் தலா இரண்டு அணிகளாக ஐந்து பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. அதன்படி குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் வங்காளதேச ஆகிய அணிகள் உள்ளன. அதனைப் போலவே குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.