பிரபல பாரத்பே நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தவர் அஷ்னிர் குரோவர். இவர் பாரத்பே நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட விநிலையில், தற்போது தன்னுடைய மனைவி மாதுரி ஜெயினுடன் இணைந்து புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது Third Unicorn என்ற நிறுவனத்தை அமைத்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும் வேலைகளை கடந்த வருடமே அஷ்னீர் குரோவர் தொடங்கிவிட்டார். ஆனால் இந்த புதிய நிறுவனம் எந்த தொழிலைச் சார்ந்தது என்ற தகவலை அவர் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் தன்னுடைய புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு புதிய தொழிலாளர்களை நியமிப்பதாக தற்போது அஷ்னீர் குரோவர் அறிவித்துள்ளார். தன்னுடைய நிறுவனத்திற்கு 50 ஊழியர்களை மட்டுமே எடுக்கப் போவதாக அவர் அறிவித்துள்ள நிலையில், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்க்க போகும் ஊழியர்களுக்கு அட்டகாசமான ஆஃபரையும் அறிவித்துள்ளார். அதன்படி தன்னுடைய நிறுவனத்தில் 5 வருடங்கள் வரை பணிபுரியும் ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.